சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே #கீழக்கோட்டை கிராமத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி இளைஞர்கள் சிலர் மஞ்சுவிரட்டு மாட்டிற்கு கண்மாயில் பயிற்சி அளித்துள்ளனர். தகவல் அறிந்து மதகுபட்டி போலீஸார் வந்ததை பார்த்த இளைஞர்கள் மாட்டை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடி உள்ளனர்.
அங்கு சென்ற போலீஸாரில் ஒருவர் (கனகராஜ்) மாட்டை அவிழ்த்து விடும்போது எதிர்பாராத விதமாக மாடு முட்டியதில் அவரது இடது கண்ணில் காயம் ஏற்பட்டு மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மஞ்சுவிரட்டு நடத்தியதாக 30 பேர் மீது வழக்குப்பதிவு. 8 பேர் கைது. மாடு முட்டியதில் தலைமைக் காவலரின் கண் பாதிப்பு. வழக்கு பதிவு செய்து தப்பி ஓடியவர்களை மதகுபட்டி காவல் நிலைய போலீஸார் தேடி வருகின்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
![This image has an empty alt attribute; its file name is appanadu_munisamy_1.jpg](https://34.68.197.11/wp-content/uploads/appanadu_munisamy_1.jpg)
ஆப்பநாடு முனியசாமி
இராமநாதபுரம்