தர்மபுரி : தர்மபுரி அருகே எஸ். கொட்டாவூர் பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணை அருகே, சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்தவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்தும், உயிரிழப்புக்கான காரணம் என்ன என்பது குறித்தும் தர்மபுரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரியில் இருந்து நமது நிருபர்
க.மோகன்தாஸ்.