திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ராஜ முரளி அவர்கள் தனது சொந்த செலவில் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள், ஊர்க்காவல் படையினர், தன்னார்வலர்கள் மற்றும் காவல் நிலையத்திற்கு வரும் மனுதாரர்களின் பசியைப் போக்கும் வகையில் கடந்த ஒரு வாரமாக காவல் நிலையத்தின் பின்புறம் உள்ள கட்டிடத்தில் உணவு சமைத்து வழங்கி வருகிறார்கள். காவல் பணியிலும் காவலர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கிவரும் காவல் ஆய்வாளரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
![](https://34.68.197.11/wp-content/uploads/dindigul-alagu-raja.jpg)
திரு.அழகுராஜா