திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், கூம்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கல்வார்பட்டி சோதனை சாவடி மற்றும் காசிபாளையம் கிராமத்தில், காவல்துறை மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் ரூ.3,20,000/- மதிப்புள்ள 13 சிசிடிவி கேமராக்களின் செயல்பாட்டினை (28.09.2022), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன், அவர்கள் துவக்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பொதுமக்களிடம் தங்கள் பகுதிகளில் அந்நிய நபர்களின் நடமாட்டம், போதை பொருள் விற்பனை மற்றும் சமூக விரோத செயல்கள் ஏதும் நடைபெற்றால் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுக்குமாறு துண்டு பிரசுரம் மூலம் பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் செல்வி.துர்கா தேவி அவர்கள் வேடசந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் கூம்பூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா