சேலம் : சேலம் ஓமலூர் உட்கோட்டம் தீவட்டிப்பட்டி காவல் நிலைய எல்லை பொம்மிடியில் இருந்து ஓமலூர் நோக்கி வந்த அரசு பேருந்து பூசாரிப்பட்டி பாலம் அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் வழிமறித்து பேருந்தில் ஏறிய ராஜகுபேந்திரன் (35), கோணம் பட்டி பூசாரிப்பட்டி என்பவர் குடிபோதையில் பேருந்தில் இருந்த பயணிகளிடம் ரகளையில் ஈடுபடவே பேருந்தில் நடத்துனர் செம்மலை (54) என்பவர் மேற்படி நபரை கீழே இறக்கி விட்டவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு ஓடி விட்டார் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்களின் உத்தரவுப்படி மேற்படி சம்பவம் குறித்த அரசு நடத்துனரின் புகார் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வழக்கின் குற்றவாளி ராஜ குபேந்திரன் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்