கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், சிப்காட் காவல் நிலைய ஜுஜுவாடி செக்போஸ்டு பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்த போது வெளிமாநில மதுபானம் கடத்தி வந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மதுபானங்கள் வாகனத்துடன் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.