சென்னை : சென்னை தாம்பரம் மாநகர காவல் பல்லாவரம் சரகம் பல்லாவரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு இனிய வழி செல்போன் அழைப்புகளை உள்ளூர் அழைப்புகளாக மாற்றி உள்ளூர் சிம் கார்டுகள் மூலமாக இந்தியாவிற்கு பரிமாற்றம் செய்யப்படுவதாக திரு.ஜெயக்குமார் என்பவர் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் திரு.அமல்ராஜ் அவர்களிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பெயரில் காவல் இணை ஆணையாளர் திரு மூர்த்தி அவர்களின் மேற்பார்வையில் காவல்துறை ஆணையாளர் திரு.ஜோஸ் தங்கையா அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் பல்லாவரம் காவல் ஆய்வாளர் திரு.தினேஷ்குமார் பல்லாவரம் காவல் நிலைய கூற்ற எண் 275/ 23 U,s. 4,20, 21,&25 of indian telegraph act 1885 &66 C,66D of information technology act 2000 & 3,6 of telegraph wires (Unlawful Possession) Act 1950 r/w 420, 120 BIPC ஆக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணையில் டிபார்ட்மென்ட் ஆஃப் டெலிகம்யூனிகேஷன் மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து சட்டவிரோத தொலைத்தொடர்பு நடைபெறுவதாக தெரியவந்த 11 c டவர் f 2 ஒலிம்பியா கிராண்ட் அப்பார்ட்மெண்ட் GST ரோடு பல்லாவரம் சென்னை என்ற முகவரியில் சோதனை செய்யப்பட்டது. இச்சோதனையில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த Fahad Muhammad என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் மேற்படி முகவரியில் வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் இன்டர்நேஷனல் போன் அழைப்புகளை டெலிட் கம்யூனிகேஷன் டிபார்ட்மெண்டுக்கு தெரியாமல் இன்டர்நெட் அழைப்புகளாக பெற்று சிம் பாக்ஸ் அமைத்து லோக்கல் சிம் கார்டுகளை உபயோகித்து சட்ட விரோதமாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி அதன் மூலம் அதிக லாபம் சம்பாதிப்பையும் இவைகள் அனைத்தையும் Sahal என்பவர் ஏற்பாடு செய்து நடத்துச் சொல்லிக் கொடுத்ததையும் ஒப்புக்கொண்டார்.
மேலும் சோதனையின் போது Dinstar Sim Box 32 Port – 5 Boxes, TP Link Modem – 2, Airton Sim Card – 445 கைப்பற்றப்பட்டது குற்றவாளி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த shal என்பவரை என்ற முகவரியில் வைத்து விசாரணை செய்ததில் குற்றவாளிSahal என்பவருக்கு ஜூப்பர் என்பவர் மூலம் டெலிகிராமில் பேசிய நபர் வெளிநாட்டு அழைப்புகளை இன்டர்நெட் மூலமாக பெற்று லோக்கல் சிம் கார்டுகள் மூலமாக உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றிக் கொடுக்கலாம் எனக் கூறியதாகவும் அதன் அடிப்படையில் தான் வேலை செய்வதாக ஒப்புக்கொண்டார் மேலும் சோதனையின் போது டின்ஸ்டர் சிம் பாக்ஸ் 32 போர்ட் நாலு பாக்ஸ் டிபி லிங்க் மோடம் ரெண்டு ஏர்டெல் சிம் கார்ட் 140 ஆகியவை கைப்பற்றப்பட்டது மேலும் இதே போல டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நம்பர் -181 18 ப்ளோர் டவர் 39 டிஎல்எப் கிராண்ட் சிட்டி கிளஸ்டர் தாழம்பூர் இருப்பதாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேற்கண்ட இடத்தில் சோதனை செய்தபோது டென்ஷ்டர் சிம் பாக்ஸ் 32 போர்ட் 7 பாக்ஸ் டிபி லிங்க் மோடம் ரெண்டு ஏர்டெல் சிம் கார்ட் 300 ஆகியவை கைப்பற்றப்பட்டது இச் சோதனையின் போது மொத்தம் dinster sim Box -32 Port -16 Boxes, tp link Modem – 6, Airtel sim card -885 கைப்பற்றப்பட்டது குற்றவாளிகள் fahad Muhammad, sahal ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். இது சம்பந்தமாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
காஞ்சிபுரத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ராஜ் கமல்