கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள வடமாமாந்தூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் நாகராஜ் 31 இவர் வீட்டின் பின்பக்க கதவு உடைத்து நகை வெள்ளி, ரூ.1½ பணத்தை மர்மநபர்கள், கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மூங்கில்துறைப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் திரு.பாலசுப்பிரமணியம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தி கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.