கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை காவல் நிலைய பகுதியான கெரகேப்பள்ளி கிராமத்தில் வீட்டின் அருகே விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது. கஞ்சா செடி வளர்த்த நபரை கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 2.640 கிலோ கிராம் கஞ்சா செடி பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.