கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ்., அவர்கள் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் கள்ளக்குறிச்சி நகரம் முழுவதும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும் மற்றும் பொதுமக்களுக்கு சாலை விதிகளை பின்பற்ற வேண்டியதின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பேரணி நடத்தப்பட்டது.
இப்பேரணியில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.ரமேஷ், காவல் ஆய்வளர், உதவி ஆய்வளர், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.