கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சவிதா மற்றும் அதிகாரிகள் திருவண்ணாமலை – கிருஷ்ணகிரி சாலையில் பாகீமானூர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற கர்நாடகா மாநிலம் பதிவெண் கொண்ட லாரியை சோதனை செய்த போது அதில் 10-கன மீட்டர் கொண்ட 5 கற்களை மத்தூரில் இருந்து ஜெகதேவிக்கு கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. புகாரின் பேரில் பர்கூர் போலீசார் லாரியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்