கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மோகன்ராஜ் ., அவர்கள், உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கஞ்சா, கள்ளச்சாராயம், லாட்டரி, ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் (07.01.2023)-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட எலவனாசூர்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. திருமால் மற்றும் தனிப்படை காவலர்கள் செம்மியம்மாதேவி, அருகே வாகன தணிக்கை செய்தபோது சந்தேகத்துக்கு இடமாக வந்த TN 32 B 1427 பதிவெண் கொண்ட இருசக்கர வாகனம் மற்றும் TN 88 D 0853 பதிவெண் கொண்ட டாராஸ் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தை பாதுகாப்பான வழிப்பாதைக்கு பயன்படுத்தி ரகோத்தம்மன் (27), சாரதி, கிளியூர் விஜயகுமார்(24), வடமாம்பாக்கம் மற்றும் 3.சிவனேசன்(17) வடமாம்பாக்கம் என்பவர்கள் லாரியில் சட்டவிரோதமாக 14 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்றதால் குற்றவாளிகளை கைது செய்து கடத்திய ரேஷன் அரிசி மற்றும் கடத்த பயன்படுத்திய இரு வாகனங்கள் (இருசக்கர வாகனம் மற்றும் டாராஸ் லாரி) பறிமுதல் செய்து குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோத ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.