விழுப்புரம்: காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர் திரு. சைலேந்திரபாபு IPS., அவர்களின் ஆலோசனையின் படி வடக்கு மண்டல காவல்துறை தலைவர் முனைவர் திரு. கண்ணன் IPS., அவர்களின் அறிவுறுத்துதலின் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் திரு. ஸ்ரீநாதா IPS., அவர்களின் உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல் நிலைய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோவிந்தராஜ் அவர்களின் தலைமையில் இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் வங்கி மேலாளர்களை நேரில் அழைத்து வங்கி பாதுகாப்பு மற்றும் ஏடிஎம் மையங்களில் பாதுகாப்புகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அனைத்து வங்கிகளிலும் ATM மையங்களிலும் பணம் எடுப்பவர்களின் முகங்களை தெளிவாக தெரிய கூடிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தவும்,
வங்கிகள் மற்றும் ஏடிஎம் மையங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் இடையே செக்யூரிட்டி அலாரங்கள் பொருத்தவும்,
ஏடிஎம் மையங்களில் பாதுகாவலர்களை நியமிக்கவும்,
ஏடிஎம் மையங்களில் மறைமுக கேமராக்களை பொருத்தவும்
ATM மையங்கள் உடைக்கும் பொழுது இது தொடர்பான ஒலிகளை எழுப்ப கருவிகளை
பொருத்தவும் மற்றும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கும் அலாரம் தொலைபேசி மூலம் ஒலி எழுப்பும் கருவிகளை பொருத்த அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் சுமார் 50.க்கும் மேற்பட்ட வங்கி மேலாளர்கள் மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.