கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N.மோகன்ராஜ்., அவர்கள் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக கள்ளச்சாரயம் கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் (10.04.2023) தேதி வடபொன்பரப்பி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.மாணிக்கம் மற்றும் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டபோது கல்வராயன் மலைப்பகுதி இருந்து இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தபோது 60 லிட்டர் பிடிக்கக்கூடிய 2 லாரி டியூபில் சுமார் 120 லிட்டர் சாராயம் கடத்திவந்த தும்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்த தம்பிதுரை(22) த/பெ தனபால் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு இரு சக்கர வாகனம் மற்றும் கடத்திய சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.