கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்துள்ள கழுதைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் எம்.எஸ்.சி. படித்து முடித்துள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியர் வேலையில் சேர விருப்பினர். இதையடுத்து தருமபுரி அருகே ஒட்டப்பட்டியை சேர்ந்த புஸ்பலிங்கம் என்பவரிடம் 3 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 24, 80 லட்சம் பணத்தை தந்துள்ளார். இதுநாள் வரை வேலை வாங்கி தரவில்லை, பணத்தையும் திருப்பி தரவில்லை என்று ராமச்சந்திரன் கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய ஒட்டப்பட்டியை சேர்ந்த புஸ்பலிங்கம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்