சேலம் : சேலம் மாவட்டம், சேலம் மாவட்ட எடப்பாடி தாலுகாவை சேர்ந்த திருமதி பிரியா (25), என்பவரின் கைபேசிக்கு (89 84 86 73 39), என்ற எண்ணில் இருந்து வந்த SMS ஐ நம்பி பல்வேறு தவணைகளில் போலியான இணையதளத்தில், ரூபாய் 1,94,700 முதலீடு செய்து பின்னர் முதலீடு செய்த தொகையினை எடுக்க முடியாமல் தான் ஏமாற்றப்பட்டதாகவும், தான் இழந்த பணத்தை மீட்டு தர வேண்டிய புகார் மனு சமர்ப்பித்திருந்தார்.
மேற்படி மனு தொடர்பாக சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அபிநவ், அவர்களின் அறிவுரைப்படி வழக்கு பதிவு செய்து சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல்துறையினரின் துரித நடவடிக்கை எடுத்ததன் பெயரில் மனுதாரர் இழந்ததில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பணத்தை (26/9/2022), அன்று மனுதாரரின் வங்கி கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது இதுபோன்று ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர் கிரைம் ஹெல்ப்லைன் நம்பர் 1930 என்ற எண்ணில் உடனே புகார் அளித்தால் இழந்த பணத்தை மீட்டு தர இயலும் எனவும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்