திருச்சி : திருச்சி மாநகரம் கண்டோன்மெண்ட் காவல்நிலைய எல்லையில் கஞ்சாவை விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் ரயில் கல்யாண மண்டபம் அருகில் ரோந்து சென்றபோது சந்தேகம்படும்படியாக நின்றுக்கொண்டிருந்த முகமது அசாருதீன் மற்றும் கோபால் ஆகியோரை பிடித்து விசாரணை செய்தபோது அவர்களிடமிருந்து ரூ.80,000/- மதிப்புள்ள சுமார் 8 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்ததை பறிமுதல் செய்தும், மேற்படி நபர்களை கைது செய்தும், வழக்குப்பதிவு செய்தும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்.