சென்னை : கிழக்கு கடற்கரை சாலை, அக்கரை பகுதியைச் சேர்ந்தவர் அபர்ஜிந்தர், (40), இவர், தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணி புரிகிறார். கடந்த 25ம் தேதி, சொந்த ஊரான உத்தரபிர தேசம் மாநிலம், நொய்டா சென்று, நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து, 20 சவரன் நகை மற்றும் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கானத்துார் போலீசார், கைரேகை உள்ளிட்ட தடயங்களை ஆய்வு செய்து, கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.