சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மதகுபட்டி அருகே மின் இனைப்பிற்கு ரசீது வழங்க ரூ 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்ற தலைவரை மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். மதகுபட்டி அருகேவுள்ளது அலவாக்கோட்டை கிராமம். இங்கு ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பிரகாஷம். இந்நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த விவசாயி இளம் கம்பன் என்பவர் தன்னுடைய நிலத்தில் செங்கல் சூளை அமைக்கவும் அதற்கான மின் இனைப்பை பெற ஊராட்சி ரசீது தேவைப்பட்டதால் தலைவர் பிரகாஷத்தை நாடியுள்ளார். அதற்கு அவர் 10000 ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில் இளம் கம்பன் சிவகங்கையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்த நிலையில் அவர்களின் ஆலோசனைப்படி ரசாயனம் தடவிய பணத்தை அலவாக்கோட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்தே இளம் கம்பன் வழங்கும் போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.