அரியலூர் : அரியலூர் மாவட்டம், திருமானூர் காவல் ஆய்வாளர் திருமதி. ஸ்ரீதேவி, தலைமையிலான காவல்துறையினர் ,ஏலாக்குறிச்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த 2 சரக்கு ஆட்டோக்களை தடுத்து சோதனை நடத்தினர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், போதை பாக்குகள் என 32 மூட்டைகள் இருந்தன. இதையடுத்து புகையிலை பொருட்களுடன் 2 சரக்கு ஆட்டோக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சரக்கு ஆட்டோக்களை ஓட்டி வந்த மேலவரப்பங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த நீதிமொழி (32), முருகேசன் (50), ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.