தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்கள், அலுவலகங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டனர். இதனையடுத்து மரக்கன்றுகள் நடப்பட்டது.
மாவட்ட காவல்துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன், அவர்கள் மரக்கன்றுகள் நட்டார் . இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் திரு. பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர் திரு. கணேச மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.