சேலம் : சேலம் வாழப்பாடி காவல் நிலைய எல்லை கண்ணுக்கானூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (22), என்பவர் கணவர் வேலு (38), என்பவருடன் குடும்ப தகராறு ஏற்பட்டு அவரது அம்மா அப்பா உடன் வசித்து வந்தவரை கடந்த (12/04/2015),ஆம் தேதி கணவர் வேலு தனுடன் வீட்டிற்கு அழைக்கவே அவருடன் செல்ல மறுத்த மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற குற்றத்திற்காக வாழப்பாடி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.உமா சங்கர், அவர்களால் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டு இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கானது சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. இந்நிலையில் சாட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு இன்று சேலம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திருமதி.கிரிஸ்டல் பபிதா அவர்களால் மேற்கண்ட குற்றவாளி வேலு என்பவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு குற்றவாளியை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார் மேலும் அரசு வழக்கறிஞர் திரு.திருசிரிபவன் அவர்கள் வழக்கில் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார் மேலும் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார், அவர்கள் திரு உமாசங்கர் அவர்களை பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்