மதுரை : மதுரை மாவட்ட காவல்துறையினரால் தொடர் குற்றங்களில் ஈடுபடக்கூடியவர்கள், மணல் திருட்டு, நில அபகரிப்பு, போதைப்பொருள் கடத்தல் பாலியல் குற்றம் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடும் சமூக விரோதிகளை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு தாலுகா கல்மேடு சக்கிமங்கலம் MGR நகரில்
வசித்து வரும் பால்பாண்டி 36, த/பெ நாகேந்திரன் என்பவர் அலங்காநல்லூர் காவல்நிலைய
சரகத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அலங்காநல்லூர் காவல் நிலையத்தில் அவர் மீது கஞ்சா போன்ற போதை பொருள் மற்றும் மனமயக்கும் பொருட்கள் உபயோக தடுப்புச் சட்டத்தின் (NDPS ACT) படி வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு சட்டத்திற்கு புறம்பாக கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட மேற்படி எதிரி பால்பாண்டி என்பவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சிபாரிசு செய்ததின்பேரில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் 14.05.2023-ம் தேதி மேற்படி நபரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் பேரில் இன்று 15.05.2023ம் தேதி மேற்படி எதிரி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
மேலும், இது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்கள் .
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்
திரு.விஜயராஜ்