இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்டத்தில், காவல் கண்காணிப்பாளர் மருத்துவர், திருமதி. தீபாசத்யன், இ.கா.ப அவர்கள் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழா முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு.விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) மற்றும் திரு.முத்துகருப்பன் (இணையவழி குற்ற பிரிவு) ஆகியோருடன் இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், அரக்கோணம் உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி காவல் ஆய்வாளர்கள், காவலர்கள், விழா அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்