திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் தைப்பூச திருவிழா- 08.02.2020 சனிக்கிழமை கொண்டாடப்படுவதை முன்னிட்டு திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.க.ஜோஷி நிர்மல்குமார் இ.கா.ப அவர்கள் தலைமையில் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.இரா.சக்திவேல் அவர்கள் பங்கேற்ற சிறப்புக் கூட்டம் பழனியில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தென்மண்டல மாவட்டத்தைச் சேர்ந்த காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், மற்றும் சார்பு ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் தைப்பூச திருவிழா பணிகளை எவ்வாறு மேற்கொள்வது குறித்தும், பக்தர்களுக்கான வசதிகள் குறித்தும், காவலர்கள் பக்தர்களிடம் கனிவான முறையில் நடந்துகொண்டு பணியினை சிறப்பாக செய்வது குறித்த அறிவுரைகளையும் கூறினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அழகுராஜா