கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (30.12.2022), ம் தேதி அதிகாலை முதல் கல்வராயன் மலைப்பகுதில் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராவிச்சந்திரன் அவர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுப்பட்டபோது பெரிய பலாபூண்டி கிராம பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்பட்டிருந்த சுமார் 6 கிலோ கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது, கஞ்சா செடிகளை பயிரிடப்பட்ட அதே கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன்(34) த/பெ பிச்சன், மேல்தெரு என்பவரை கைது செய்து அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபட்டு மேற்படி குற்றவாளி நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்றாலோ, பயிர்செய்தாலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.