திண்டுக்கல் : திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் மூதாட்டியிடம் 1/2 பவுன் தோட்டை பறித்துச் சென்ற மர்ம நபர் கைது கடந்த10ம் தேதி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் பஸ்சுக்காக நின்றிருந்த ரெட்டியார் சத்திரம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள் (80). என்பவரிடம் 1/2 பவுன் தோட்டை மர்ம நபர் பறித்துச் சென்றுள்ளான் இதுகுறித்து திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு உள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் வடக்கு நகர் காவல் நிலைய டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் உத்தரவின் பெயரில் வடக்கு நகர காவல் ஆய்வாளர் உலகநாதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கார்த்திகேயன் நகர குற்ற தடுப்பு பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வீரபாண்டியன் ஜார்ஜ் காவலர்கள் முகமது அலி ராதாகிருஷ்ணன் விசுவாசம் சக்திவேல் கொண்ட தனிப்படை சி.சி.டிவி காவலர் ஜான். செல்வி ஆகியோரின் உதவியுடன் சி.சி.டிவி பதிவுகளை ஆய்வு செய்து மேற்கொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திண்டுக்கல் முத்தழகுப்பட்டியைச் சேர்ந்த தங்கராஜ் மகன் செல்வராஜ் (50). என்பவரை கைது செய்து1/2 பவுன் தோட்டை மீட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா