தேனி: குற்றங்களை தடுக்கவும் கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றி வரும் நிலையில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் போடி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பழுதாகி உள்ள சிசிடிவி கேமராக்களை சீரமைத்தும், புதிய கேமராக்களை நிறுவியும் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கும் பொருட்டு 64 சிசிடிவி கேமராவுடன் போடி நகர் காவல் நிலையத்தில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு அறையினை போடி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.N.சுரேஷ் அவர்கள் திறந்து வைத்தார்.
மேலும் பொதுமக்கள் தங்களின் வணிக வளாகங்கள், குடியிருப்பு பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி குற்ற நிகழ்வுகளை தடுக்கவும், குற்றவாளிகளை கண்டறியும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டுமென அறிவுறுத்தப்படுகிறது.