திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய காண்டீபன் வயது (47), கிருபாகரன் வயது (47) ஆகிய இருவருக்கும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் பரிந்துரையின் பேரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. பொன்னையா IAS அவர்கள் குண்டர் (GOONDAS. ACT) தடுப்பு காவலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மேற்படி நபர்கள் இருவரையும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.