திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி திருப்பாலைவனம் அருகே உள்ள பூவமை கிராமத்தை சேர்ந்தவர் மணி, இவர் ஆடு மேய்த்து குடும்பத்தை காப்பாற்றி வருகிறார் .ஆடு மேய்த்து விட்டு நேற்று இரவு வீட்டில் உள்ள கொட்டகையில் கட்டி வைத்துள்ளார். திடீரென ஆடுகள் கூச்சல் இட்டதால், மணி எழுந்து வந்து பார்த்த பொழுது ஆட்டை ஒருவர் தோலில் தூக்கி சென்று உள்ளார்.
இதை கண்ட மணி கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினர் ஆடு திருடிய வாலிபரை மடக்கி பிடித்து காவல் நிலையத்தில், ஒப்படைத்தனர் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என தெரியவந்தது. ஆடு திருடிய வழக்கில் காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு