திருப்பத்தூர் : திருப்பத்தூர் ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று அதிகாலை வந்தபோது சேலம் உட்கோட்ட ரெயில்வே தனிப்படை போலீசார் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்ததில் 8 பண்டல்களில் தலா ஒருகிலோ வீதம் சுமார் 8 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து ரெயில் பெட்டிகளில் இருந்த பயணிகளிடம் போலீசார் விசாரணை செய்தனர். ஆனால் அதை கடத்தி வந்தவர்கள் யார் என்பது தெரியவில்லை. அதைத்தொடர்ந்து கஞ்சாவை கைப்பற்றி ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் ரெயிலில் கஞ்சா கடத்தி வந்தவர்கள் யார் என்பது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.