சேலம் : சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம் பெரியார் நகர் தங்கம் மாதிரி பட்டினத்தை சேர்ந்த திரு சிவராஜ் (41), என்பவருக்கு 70 92 84 1125 என்ற எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய நபர் குறைந்த வட்டியில் தனிநபர் கடன் தருவதாக கூறியதை நம்பி அதனை பெற 15 தவணைகளில் ரூபாய் ஒரு லட்சத்து ஆயிரம் கட்டிய பின் லோன் தராமல் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை அனைத்து பணத்தை மீட்டு தர வேண்டி புகார் மனு சமர்ப்பித்தார்.மேற்படி மனு தொடர்பாக திரு.எம். ஸ்ரீ.அபிநவ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்படிசைபர்கிரைம் கூடுதல் காவல்கண்காணிப்பாளர் ஏ.சி. திரு.செல்லப்பாண்டியன், அவர்களின் மேற்பார்வையில் சேலம் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் துரித நடவடிக்கை எடுத்ததன் பேரில் மனுதாரர் இழந்த பணத்தை (22/08/2022),அன்று மனுதாரரின் வங்கிக் கணக்கில் திரும்ப சேர்க்கப்பட்டது.
மேலும் அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்புகள் மற்றும் வங்கியில் இருந்து பேசுவதாக கூறுவதையும் செல்போனுக்கு அனுப்பும் குறுஞ்செய்திகளையும் நம்பி தங்களின் வங்கி விபரம் மற்றும் otp களை யாரிடமும் பகிர வேண்டாம் எனவும் அவ்வாறு யாரேனும் ஆன்லைன் மோசடி மூலம் பணத்தை இழந்து விட்டால் உடனடியாக சைபர் கிரைம் அவசர உதவி எண் 1930 தொடர்பு கொள்ளலாம் என்று மேலும் என்ற இணையதளத்தில் உடனே புகாரை பதிவு செய்யவும் இழந்த பணத்தை மீட்டு தர இயலும் எனவும் திரு.எம்.ஸ்ரீ அபிநவ், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்