சேலம் : நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கம் மற்றும் போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக சேலம் மாவட்டத்தில் இன்று காவலர் தினம் காவல் நிலையங்களில் அனுசரிக்கப்பட்டது. காவலர்களுக்கு வாழ்த்துக் கூறி, உற்சாகப்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சி நியூஸ் மீடியா அசோசியேசன் ஆப் இந்தியா சங்கத்தின் தேசிய தலைவரும், போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியரும், மற்றும் தேசிய காவலர் தின நிறுவனமான திரு. அ. சார்லஸ் அவர்கள் அறிவுறுத்தலின்படி, வணிகர்கள் பிரிவு மாநில பொதுச் செயலாளர் திரு.மூர்த்தி, வணிகர்கள் பிரிவு மாநில மேற்கு மண்டல தலைவர் திரு. ஜாபர், வணிகர்கள் பிரிவு சேலம் மாவட்ட பொதுச் செயலாளர் திரு. காதர் பாட்ஷா, குடியுரிமை நிருபர்கள் சரவணன் மற்றும் முத்துராமன் ஆகியோர் காவல் நிலையங்களுக்கு சென்று காவலர்களுக்கு காவலர் தின வாழ்த்து கூறி உற்சாகப்படுத்தினர்.
காவலர்கள் தினத்தை முன்னிட்டு சேலம் மாவட்டம் திரு கென்னடி.காவல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், சேலம் மாவட்டம் திரு ம.மாடசாமி, காவல் துணை ஆணையாளர்- வடக்கு, சேலம் மாவட்டம் காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி.D.சங்கீதா.DSP ஓமலூர் சரகம், மேட்டூர் சரகம் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. விஜயகுமார். காவல் உதவி ஆணையர் (தெற்கு) திரு வெங்கடேசன், சூரமங்கலம் காவல் நிலைய காவல் ஆய்வாளர், திரு.சிவக்குமார், Town காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.பழனியம்மாள் அவர்களுக்கு காவலர்கள் தின வாழ்த்து கூறபட்டது.
இன்று சேலம் புதிய பேருந்து நிலையத்தில் நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆஃப் இந்தியா சங்கம் சார்பாக காவலர்கள் தினத்தை முன்னிட்டு சாலையில் வசிக்கும் சுமார் 150 ஏழை எளிய,வயதான மக்களுக்கு வெஜிடேபுள் பிரியாணி மற்றும் தண்ணிர் பாட்டில் ஆகியவை சேலம் புதிய பேருந்து நிலையை பள்ளப்பட்டி காவல் ஆய்வாளர் திருமதி ராணி.அவர்களின் முன்னிலையில் திரு,நடேசன்,காவல் உதவி ஆய்வாளர் அவர்களின் கரங்கலால் உணவு பரிமாறப்பட்டது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் காவலர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடன், இனிப்புகள் வழங்கியும், காவல்துறையினருக்கு பயனுள்ள வருட நாட்காட்டி(Police News Plus Calendar)) வழங்கியும், வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டியும் வெகு விமர்சியாக கொண்டாடப்பட்டது