இராணிப்பேட்டை : இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் (10/10/2022), நடைபெற்ற குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர்கள் திரு. விநாயகமூர்த்தி ஆற்காடு நகர காவல் நிலையம், திரு. மணிமாறன் காவேரிப்பாக்கம் காவல் நிலையம், உதவி ஆய்வாளர் திரு. யுவராஜ் கொண்டபாளையம் காவல் நிலையம், தலைமை காவலர்கள் திரு.சுப்பிரமணி இராணிப்பேட்டை காவல் நிலையம், திரு.பிரபாகரன் வாழைப்பந்தல் காவல் நிலையம், முதல் நிலை காவலர்கள் திரு. பாலாஜி வாழைப்பந்தல் காவல் நிலையம், திரு. இராஜ்கமல் வாலாஜா காவல் நிலையம், திரு. இராஜேஷ் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு. பத்மநாபம் ஆற்காடு நகர காவல் நிலையம், காவலர்கள் செல்வி. கவிதா அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையம்.
திரு. சுகுமாரன் மற்றும் திரு.சேட்டு அரக்கோணம் கிராமிய காவல் நிலையம், திரு. ஜவித்கான், வாலாஜா காவல் நிலையம், திரு. வெங்கடேசன் அரக்கோணம் நகர காவல் நிலையம், திரு.மேகன் நெமிலி காவல் நிலையம் ஆகியோரை பாராட்டி அவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர். தீபா சத்யன் இ.கா.ப அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை வழங்கினார்கள். மேலும் இக்குற்ற ஆய்வுக் கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் திரு. விஸ்வேஸ்வரய்யா (தலைமையிடம்) அவர்கள் திரு. முத்து கருப்பன் (இனணயவழி குற்றப்பிரிவு) அவர்கள், இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு அவர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்