கோவை முக்கிய கிரைம்ஸ் 08/04/2021

கோவையில் சைக்கிள் மீது வேன் மோதி முதியவர் பலி

கோவை பீளமேடு பக்கமுள்ள ஏ.ஜி . புதூர் பிள்ளையார் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ரங்கசாமி ( வயது 65 ) இவர் நேற்று ஏ. .ஜி புதூர் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு வேன் இவரது சைக்கிள் மீது மோதியது. இதில் ரங்கசாமி படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு அவர் இறந்தார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பாலக்காடு பல்ல சேனாவை சேர்ந்த வேன் டிரைவர் மாதவன் (வயது 59) என்பவரை கைது செய்தனர் .மேலும் விசாரணை நடந்து வருகிறது.

கோவையில் மின்சாரம் தாக்கி ஏசி மெக்கானிக் சாவு:2 பேர் மீது வழக்கு

கோவை ஏப்8 கோவை சிங்காநல்லூர் உப்பிலிபாளையம் சக்தி விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன் ( வயது 63) ஏசி மெக்கானிக். இவர் பீளமேடு காளப்பட்டி ரோடு நேரு நகரில் வசிக்கும் அசோக் என்பவரது வீட்டில் ஏ.சி.மெஷின் மாட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துமனையில் சேர்த்தனர் .அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் இறந்தார் .இதுகுறித்து அவரது மனைவி பிரேமா பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் அந்த வீட்டின் உரிமையாளர் அசோக் , எலக்ட்ரிசியன் சண்முக நாதன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கோவையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் திடீர் மாயம்

கோவை சிங்காநல்லூர் சின்ன குருசாமி லேஅவுட்டை சேர்ந்தவர் ஷேக் அலாவுதீன். .இவரது மகள்கள் சனோபர் ( வயது 18 ) செரின் (வயது 15) அஸ்மி ரா (வயது 14) இவர்களில் சனோ பர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். மற்ற 2 பேரும் பேரும் கோவையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1,  10-ம் வகுப்பு  படித்து வருகிறார்கள். கடந்த 6 – ந் தேதி வீட்டிலிருந்து அக்கா – தங்கைகள் 3 பேரும் திடீரென்று மாயமாகி விட்டனர் .சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

கோவை அருகே காதல் திருமணம் செய்த அதிகாரி தூக்கில் தற்கொலை

கோவை பக்கம் உள்ள வடவள்ளி நியூ தில்லை நகரை சேர்ந்தவர் அருண் குமார் (வயது 39 )இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாடு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி லாமியா ( வயது 33) இவர்கள் இருவரும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகன் உள்ளான். அருண்குமார் தனது குடும்ப செலவுக்காக கடன் வாங்கியிருந்தார்’. அதை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் நேற்று அவரது வீட்டின் மின் விசிறியில் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி லாமியா வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் சேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
நமது குடியுரிமை நிருபர்
A. கோகுல்

மேலும் செய்திகள்

ADVERTISEMENT

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist