கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி உட்கோட்டம், கள்ளக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நரிமேடு பகுதியில் தனியாக உள்ள வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கிடைத்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்த போது அந்த வீட்டில் வசித்து வந்த வளர்மதி அவரது 11 வயது மகன் மற்றும் 10 மாத குழந்தை ஆகிய மூவரும் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தனர் உடனடியாக கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜவஹர்லால், துணை காவல் கண்காணிப்பாளர்கள் திரு.இரமேஷ், திரு.திருமேனி மற்றும் திரு.பாலசுப்ரமணியன் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய உத்தரவிட்டர். அதன்படி காவல் ஆய்வாளர்கள் திரு.இரவிச்சந்திரன், திரு.பாலகிருஷ்ணன், திரு.சேதுபதி, திரு.இராஜாராம், காவல் உதவி ஆய்வாளர்கள் திரு.ஆனந்தராசு, திரு.திருமால், திரு.சிவசந்திரன், திரு.சத்தியசீலன், திரு.பாரதி, கள்ளக்குறிச்சி மாவட்ட சைபர் க்ரைம் காவலர் திரு.சிவராமகிருஷ்ணன் மற்றும் காவலர்களை கொண்ட தனிப்படையினர் தீவிரமாக கொலை நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தும், சந்தேகப்படும் நபர்களை வைத்தும் தீவிரமாக விசாரணை செய்துவந்தனர்.
காவல்துறையினரின் கிடுக்குப்பிடி விசாரணையில், கொலை செய்யப்பட்ட வளர்மதியின் சித்தி உறவு முறையான அஞ்சலை (எ) விமாலா என்வருக்கும் வளர்மதிக்கும் இடையோ வீட்டு மனை மற்றும் பணம் கொடுக்கல் வாங்கள் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு அஞ்சலை (எ) விமாலா(50) க/பெ பெருமாள், செங்குறிச்சி கிராமம், உளுந்தூர்பேட்டை என்பவர் 1,50,000/- லட்சம் பணம் கொடுத்து பாசார் கிரமத்தை சேர்ந்த தமிழ்செல்வன்(27) , த/பெ சுப்புரமணியன், பூபாலன்(30) த/பெ சுப்புரமணியன், சிவா(39) த/பெ சின்னப்பன், மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், கடலங்குடியைச் சேர்ந்த ராமு(24) த/பெ நாகராஜன் ஆகியோருடன் சேர்ந்து கூட்டுச் சதித் திட்டம் தீட்டி கடந்த (17.04.2023)–ந் தேதி இரவு வளர்மதியின் வீட்டிற்கு சென்று பூபாலன் மற்றும் சிவா ஆகியோர் வீட்டின் வெளியே நின்று ஆள்நடமாட்டத்தை கவனித்துக் கொண்டும் அஞ்சலை, கையில் கத்தியுடன் இருந்த தமிழ்செல்வன் மற்றும் ராமு ஆகியோர் வளர்மதியின் வீட்டிற்குள் புகுந்து வளர்மதியின் முதுகில் கத்தியால் குத்தியும் கழுத்தை அறுத்தும் வீட்டில் தூங்கி கொண்டிருந்த வளர்மதியின் குழந்தைகளை கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கு இருந்த தடயங்களை அழித்துவிட்டு தப்பி ஓடியது தெரியவரவே மேற்படி 5 நபர்களையும் தனிப்படையினர் அதிரடியாக கைது செய்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறப்பாக புலன் விசாரணை செய்து விரைவாக எதிரிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N.மோகன்ராஜ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.