கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புகையிலை, கஞ்சா, கள்ளச்சாராயம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன், இ.கா.ப., அவர்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். (01.12.2022)-ந் தேதி திருக்கோயிலூர் காவல் நிலைய தனிப்படை உதவி ஆய்வளார் திரு. சிவசந்திரன் மற்றும் காவலர்கள் குணசேகரன், சுரேஷ் ஆகியோர் திருக்கோவிலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேமாலூர் ஏரிக்கரை அருகில் TN 32 AT 8380 என்ற பதிவெண் கொண்ட Bajaj Platina இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கள்ளக்குறிச்சி மாவட்டம், மேமாலூர் கிராமத்தை சேர்ந்த 1) மணிகண்டம்-37 த/பெ முனியன் மற்றும் 2) ஞானவேல்-30 த/பெ வீரன் ஆகிய இருவரும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்காவை கடத்தி சென்றவர்களை கைது செய்து அவர்களிடம் 705 பாக்கெட்டுகளில் இருந்த 14 கிலோ குட்கா மற்றும் ஒரு இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்து மேற்படி குற்றச்செயலில் ஈடுபட்ட இருவரையும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான்மசாலா, குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை, விற்பனை செய்தாலோ அல்லது கடத்தினாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதுடன், குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்படுவார்கள் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.