சேலம் : (17/ 09/2022), சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில், காவல் கண்காணிப்பாளர் திரு. அபிநவ் இ.கா.ப, அவர்கள் தலைமையில், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும், எனது வாழ்வில் வழிமுறைகளாக கடைபிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும் பகுத்தறிவு பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும் சமத்துவம் சகோதரத்துவம் சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக, என்னை ஒப்படைத்துக் கொள்வேன்.
மானுடத்தின் மீது பற்றையும் மனிதாபிமானத்தையும் என்றும் போற்றுவேன் சமூக நீதியையே அடித்தளமாகக் கொண்ட சமுதாயம் அமைத்திட இந்த நாளில் உறுதி அளிக்கிறேன். எனக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.கென்னடி, (தலைமையிடம்) திரு. ராஜகாளிசுவரன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு பிரிவு மற்றும் திரு.செல்லப்பாண்டியன் (கணினி சார் குற்ற தடுப்பு பிரிவு) உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்