திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில், காவல்துறையினர், பொதுமக்கள் நல்லுறவு வாலிபால் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. விளையாட்டு போட்டியை தாராபுரம் துணை காவல் சூப்பிரண்டு திரு.தனராசு, வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார்.அதில் தாராபுரம், குண்டடம், அலங்கியம், மூலனூர் ஆகிய போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில், இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டு வாலிபால் விளையாடினர். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தாராபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு தனராசு பரிசு வழங்கினார்.இதில் தாராபுரம் காவல் ஆய்வாளர் திரு.மணிகண்டன், காவல் உதவிஆய்வாளர் திரு. கருப்புசாமி, காவல்துறையினர், மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.