திருவண்ணாமலை : தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.செ.சைலேந்திரபாபு,இ.கா.ப., அவர்கள், திருவண்ணாமலை மாவட்டத்தில் தானிப்பாடி காவல் நிலைய குற்ற எண் (25/1/2022) வழக்கில் தண்டராம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் திருமதி.R.தனலட்சுமி, அவர்கள் தலைமையில் காணாமல்போன 7 பஞ்சலோக சிலைகள் மற்றும் 2 வெண்கல சிலைகளையும் மீட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறப்பான முறையில் பணியாற்றிய காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழினை வழங்கி சிறப்பித்து அவர்களை வெகுவாக பாராட்டினார். உடன் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் திரு.N.கண்ணன்.இ.கா.ப., மற்றும் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.கி.கார்த்திகேயன்.இ.கா.ப. அவர்களும் இருந்தனர்.