சென்னை : பொது மக்களின் சேவையில், தன்னலம் கருதாமல் சிறப்பாக செயல்பட்டு சிறிய பணியாற்றிய ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு, 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு அவர்களது பணியை பாராட்டி சிறந்த பொதுச் சேவைக்கான தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கம் வழங்கப்பட்டது. திரு.பிரேம் ஆனந்த்சிங்ஹா இ.கா. ப, கூடுதல் காவல் ஆணையாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு தெற்கு (சென்னை பெருநகர காவல்), திரு.க.அம்பேத்கார் காவல் ஆய்வாளர்(தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கடலூர்), திரு.சுவராமன் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (அடையாறு போக்குவரத்து காவல் நிலையம் சென்னை பெருநகர காவல்), திரு.வைபழனி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (இ2 மதிச்சியம் போக்குவரத்தை காவல் நிலையம் மதுரை மாநகரம்), திரு.ம. குமார், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் (ஜே 10 செம்மஞ்சேரி போக்குவரத்து காவல் நிலையம் தாம்பரம் காவல் ஆணையரங்கம்) இதே போன்று புலன் விசாரணை பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும் பணியில் ஈடுபாடு மற்றும் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும் கீழ்க்கண்ட பத்து காவல்துறை அதிகாரிகள் 2022 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சரின் காவல் புலன் விசாரணை காண சிறப்பு பணி பதக்கங்கள் வழங்கப்பட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.
திரு.கோ ஸ்டாலின், காவல்துறை துணை ஆணையாளர் (தலைமையிடம் மதுரை மாநகரம்), திரு. ச.கிருஷ்ணன், காவல்துறை கண்காணிப்பாளர் (ஒருங்கிணைந்த குற்ற அழகு குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை சேலம் மாநகரம்), திருமதி.ம.பிருந்தா காவல் ஆய்வாளர் (ரோஷனை காவல் வட்டம் விழுப்புரம் மாவட்டம்), திருமதி.அ பிரபா காவல் ஆய்வாளர் (குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை நாமக்கல் மாவட்டம் ), திரு.வி. சீனிவாசன், காவல் ஆய்வாளர் (ஆர்2 கோடம்பாக்கம் காவல் நிலையம் சென்னை மாநகர காவல்) திருமதி. ம.சுமதி, காவல் ஆய்வாளர் (அனைத்து மகளிர் காவல் நிலையம் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம்), திருமதி.சி. நாகலட்சுமி காவல் ஆய்வாளர் (காரியாபட்டினம் காவல் நிலையம் நாகப்பட்டினம் மாவட்டம்), திரு.வேல் துளசிதாஸ், காவல் உதவி ஆய்வாளர்( டி 12 பூவிருந்தவல்லி போக்குவரத்து புறனாய்வு பிரிவு புலனாய்வு பிரிவு சென்னை பெருநகர காவல்) திரு.ச.ல. பார்த்தசாரதி காவல் உதவி ஆய்வாளர் (குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வு துறை ஒருங்கிணைந்த குற்ற அளவு சென்னை), திரு.க. இளையராஜா காவல் உதவி ஆய்வாளர் (அடையாறு மதுவிலக்கு அமலாக்க பிரிவு சென்னை), விருதுகள் பெறுவோர் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப்பதக்கமும் 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்படும் மேற்கண்ட விருதுகள் இந்த விருதுகள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பிரிதொரு விழாவில் வழங்கப்படும்.