கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் உதவி ஆய்வாளர் மணி (60) நேற்று விருகாவூர் அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயங்களுடன் கள்ளக்குறிச்சி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறந்து போன உதவி ஆய்வாளர் மணி இன்னும் 2 மாதங்களில் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.