சென்னை : சென்னை மீனம்பாக்கம், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய் பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த ரகீம் (30), ஆலந்தூரை சேர்ந்த முகமது ஆசீப் (32), ஆகியோரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை சோதனை செய்தனர். அதில் பயன்படுத்தப்பட்ட லேப்டாப்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் இருந்தன. பின்னர் 2 பேரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது 2 பேரும் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்தனர். 2 பேரிடம் இருந்து ரூ. 59 லட்சத்தி 70 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கமும் ரூ. 4 லட்சத்தி 86 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினார்.
அப்போது உள்ளாடைக்குள் விலையுர்ந்த நவரத்தின கற்கள், மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 23லட்சத்தி 13 ஆயிரம் மதிப்புள்ள 1706.05 கேரட் விலையுர்ந்த கற்களை கைப்பற்றினார்கள். விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், ரூ. 87 லட்சத்தி 69 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 281 கிராம் தங்கம், 1706 கேரட் விலையுர்ந்த கற்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இலங்கை வாலிபர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.