கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.பகலவன் இ.கா.ப., அவர்களின் உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் (29.12.2022), ம் தேதி மதுவிலக்கு அமலாக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.ராவிச்சந்திரன், அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மதுவிலக்கு அமலாக்கு பிரிவு காவல் ஆய்வாளர் திருமதி.தாரணிஸ்வரி, தலைமையில் தனிப்படை போலீசார் வரஞ்சரம் மணிமுத்தா பாலம் அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த குருர் கிராமத்தைச் சேர்ந்த 1.ரங்கநாதன்(19), விக்னேஷ்(19),சந்துரு(19) என்பவர்களை சோதனை செய்ததில் சுமார் 700 கிராம் அளவு கொண்ட கஞ்சா மற்றும் குருர் எரிக்கரை அருகில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த 4.கார்த்திக்(23) த/பெ கருப்பையன், முடியனூர் என்பவரை சோதனை செய்ததில் சுமார் 300 கிராம் அளவு கொண்ட கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தும் TN15 K 4609 பதிவேன் கொண்ட ஒரு இருசக்கர வாகனம் என இரு வழக்கிலும் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 1 கிலோ கஞ்சா மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யபட்டு மேற்படி குற்றவாளிகள் நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா கடத்தி சென்றாலோ, விற்பனையில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.