இராணிப்பேட்டை : (12.09.2022),- ம் தேதி மாலை சுமார் 05.00 மணியளவில் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா. சத்யன் இ.கா.ப, அவர்கள் தலைமையில், இராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து வியாபாரிகள் சங்கத்தினருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா. சத்யா இ.கா.ப அவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சாவை எவரேனும் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு சீல் வைத்து அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், அவர்களை வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு அவர்களது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் அரசு உடமையாக்கப்படும் என்றும், மேலும் இந்த வருடம் மொத்தம் 428 குட்கா வழக்குகளும் 80 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 517 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதில் 18 நபர்கள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
என்றும் 28 நபர்களின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்கள். மேலும் இக்கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம் ) திரு. விஸ்வேஸ்வரய்யா , இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு. பிரபு, காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.மேலும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரும் இனிவரும் காலங்களில் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் கஞ்சா மற்றும் குட்கா இல்லாத மாவட்டத்தினை உருவாக்குவோம் என்றும் உறுதி ஏற்றனர். என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
நமது குடியுரிமை நிருபர்
திரு. S. பாபு
தென்னிந்திய தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்