• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, June 17, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    மாணவ மாணவிகளுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    இலவச நோட் புத்தகம் வழங்கும் விழா

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

    கிராம பொதுமக்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனையை முற்றிலும் ஒழிக்க அதிரடி நடவடிக்கை

by Admin2
June 25, 2023
in Latest News
Reading Time: 1 min read
93 1
A A
0

மதுரை : 2023-ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் (26.06.2023) – தென்மண்டலத்தில் கஞ்சாவிற்கு எதிரான நடவடிக்கைகள் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனை மற்றும் கடத்தலை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் நோக்கமாக வருடந்தோறும் சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினம் ஜூன் 26-ம் தேதி உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க தென்மண்டலத்தில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனைக்கு எதிராக போதுமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வரப்படுகிறது. கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகளை காவல்துறையினர் தொடர்ந்து எடுத்து வருகின்றனர். அவ்வாறு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தொடர்ச்சியாக இவ்வருட தொடக்கம் முதல் மே மாத இறுதி வரை கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 469 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டும், அவற்றில் ஈடுபட்ட 917 கஞ்சா குற்றவாளிகளை கைது செய்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வழக்கு பதிவு செய்தல், கைது நடவடிக்கை, கஞ்சா பறிமுதல் என்பதோடு நின்றுவிடாமல் கஞ்சாவிற்கு எதிரான நடவடிக்கையின் தீவிரத்தை அதிகப்படுத்தும் விதமாக கஞ்சா விற்பனையில் தொடர்ந்து ஈடுபடும் கொடுங்குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை கட்டுபடுத்த, அக்குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கம் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறாக கடந்த ஆண்டு முதல் தற்போது வரை13 முக்கியமான கஞ்சா வழக்குகளில் நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களது நெருங்கிய உறவினர்களின் ரூபாய் 14 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களும் (44-வீடுகள், 26-பிளாட்கள்/இடங்கள், 5-கடைகள்) அவற்றோடு அவர்களின் அசையும் சொத்துக்களையும் முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட நடவடிக்கைகள் ஒரு குறிப்பிட்ட வழக்குகளில் மட்டுமே மேற்கொள்ள முடியும் என்பதால் மற்ற கஞ்சா வழக்குகளிலும் இதற்கு இணையாக நடவடிக்கை எடுக்க வேண்டி, கஞ்சா குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய வங்கி கணக்குகளை குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 102-ன் படி முடக்கம் செய்யலாம் என்ற அடிப்படையில், மற்ற கஞ்சா வழக்குகளிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வாறாக, கடந்த ஒரு வருட காலத்தில், தென்மண்டலத்தில் 1316 கஞ்சா வழக்குகளில், அவ்வழக்குகளின் குற்றவாளிகள் மற்றும் அவர்களின் நெருங்கிய உறவினர்களின் சந்தேகத்திற்குரிய 2448 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளோடு நின்று விடாமல் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் அடுத்த கட்ட நகர்வாக குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973 யின் படி நன்னடைத்தைக்கான பிணையம் பெறப்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக நன்னடத்தைக்கான பிணையபத்திரம் ரவுடி மற்றும் சந்தேக குற்றவாளிகள் மீது பெறப்படும். இச்சட்டம் கஞ்சா குற்றவாளிகளுக்கும் பொருந்தும் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு முதல், தென்மாவட்டங்களில் கஞ்சா மற்றும் போதை வஸ்துகள் விற்பனையில் ஈடுபட்டுவந்த குற்றவாளிகளை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டாச்சியர் / தாசில்தார் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி, நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது. அவ்வாறாக இவ்வருட தொடக்கம் முதல் மே மாத இறுதி வரை கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 814 கஞ்சா குற்றவாளிகள் மீது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையின் விளைவாக குற்றவாளிகள் மத்தியில் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் இக்குற்றத்தில் ஈடுபடுவதிலிருந்து அவர்கள் விலக ஒரு வாய்ப்பாக அமையும்.

மேற்கண்டவாறு குற்ற விசாரணை முறைச் சட்டம்-1973-ன்படி நன்னடைத்தைக்கான பிணைய பத்திரம் பெறலாம் என்பதோடு நின்றுவிடாமல், கஞ்சா வழக்குகளில் தண்டனை பெறும் குற்றவாளிகள் மீதும், நீதிமன்றத்தில் தண்டனை தீர்ப்புரைக்கும் சமயத்தில் NDPS Act பிரிவு 34-ன் கீழ் கணம் நீதிமன்றமானது நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெறலாம் என்பதை அறிந்து அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பலனாக இவ்வருட தொடக்கம் முதல் மே மாத இறுதி வரை கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 338 கஞ்சா குற்றவாளிகள் மீது கணம் நீதிமன்றங்கள் நன்னடத்தைக்கான பிணையபத்திரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இவ்வாண்டில் இதுவரை தென்மண்டலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 71 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சாவிற்கு எதிரான நடவடிக்கையின் தீவிரத்தை அதிகபடுத்தும் விதமாக, குற்றவாளிகள் கஞ்சாவை அதிகப்படியாக எங்கிருந்து பெற்று வருகிறார்கள் என்பதை ஆராய்ந்த போது வேறு மாநிலங்களிலிருந்து கஞ்சாவை மொத்தமாக பெற்றுவருவது தெரிந்து, அவற்றை கட்டுப்படுத்த, கஞ்சா விற்பனை செய்த குற்றவாளிகள் வேறு மாநிலத்திலிருந்த போதும் அவர்களை தேடி கண்டு பிடித்து கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 20 முக்கிய குற்றவாளிகள் வேறு மாநிலத்திலிருந்து கைது செய்யபட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கஞ்சா குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ததோடு நின்றுவிடாமல் அவ்வழக்குகளை தொடந்து கண்காணித்து நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு உட்படுத்தி உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்குகள் மட்டுமின்றி, நிலுவையில் இருந்த பழைய கஞ்சா வழக்குகளிலும் புலனாய்வு முடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு கோப்புகளை தாக்கல் செய்து நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறாக கடந்து ஒரு வருட காலத்தில் மட்டும் 3200 கஞ்சா வழக்குகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வருட தொடக்கம் முதல் மே மாத இறுதி வரை கடந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் தென்மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாநகரில் 684 கஞ்சா வழக்குகள் தண்டனையில் முடிந்துள்ளது. அவற்றில் 6 வழக்குகள் வணிக அளவுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்காகும் என்பது மிகவும் குறிப்பிடதக்க ஒன்றாகும். மேலும், பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்குகளை தொடராய்வு செய்து வழக்கின் போக்கினை கண்காணித்து வருவதுடன், நீதிமன்ற காவலில் உள்ள குற்றவாளிகள் பிணையில் செல்ல எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வழக்குகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளும் தென்மண்டலத்தில் எடுக்கப்பட்டுவருகிறது. அவ்வாறு எடுக்கப்பட்ட முயற்சியின் பலனாக வழக்குகளில் பல குற்றவாளிகள் பிணையில் செல்லாமல் தடுக்கப்பட்டுள்ளனர்.

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் முனைவர்.C.சைலேந்திர பாபு, இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலின் பேரில், தென்மண்டல காவல்துறை தலைவரின் தலைமையில், திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் மற்றும் மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர்கள் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் சம்மந்தமான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அவர்களின் மேற்பார்வையில் மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, இராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களின் தீவிர நடவடிக்கையில் கஞ்சாவிற்கு எதிரான அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது. கஞ்சா சமூகத்தின் மிகப்பெரிய சீர்கேடாகும், குறிப்பாக இளைஞர்களின் உடல்நலத்தைக் கெடுத்து அவர்களின் எதிர்கால வாழ்வை கேள்விக்குறியாக்கும் சீர்கேட்டை சமூகத்திலிருந்து முற்றிலுமாக வேரறுக்க அனைத்து பொது மக்களின் மேலான ஒத்துழைப்பு அவசியம் என சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி தென்மண்டல காவல்துறை தலைவர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன், கஞ்சாவிற்கு எதிரான இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என தெரிவித்துள்ளார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்

Related

Tags: Madurai
Share127Tweet79Send

மேலும் செய்திகள்

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

தென்கரை மூலநாத சாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம் நடைப்பெற்றது

June 8, 2025
ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஆதனூர் கிராமத்தில் ஶ்ரீ அண்ணகாமு, உருமண கருப்புசாமி கோவில் கும்பாபிஷேக விழா

June 8, 2025
திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

திருப்பரங்குன்றத்தில் பக்ரீத் தொழுகை: போலீசார் பாதுகாப்பு

June 7, 2025
உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

உசிலம்பட்டி மாணவர்கள் மரம் நட்டு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு!

June 7, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.