கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் டவுன் காவல் நிலைய பகுதியில் ஓசூர் பழைய பெங்களூர் ரோட்டில் உள்ள பெட்டி கடையில் மற்றும் ஆட்டோவில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்த போது சுமார் 600 கிராம் கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது. கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்த நான்கு நபர்களை கைது செய்து, கஞ்சா சாக்லேட்டுகள், இரண்டு ஆட்டோ வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்