சேலம் : சேலம் ஓமலூர் உட்கோட்டம், ஓமலூர் காவல் நிலைய பகுதி சேர்ந்த லோகநாயகி என்பவர் தன் குழந்தைகளுடன் மேட்டூர் காவேரி பாலம் பகுதியில் தங்கி இருந்து கூலி வேலைக்கு சென்று ஜீவனம் செய்து வருவதாகவும் அப்போது மேட்டூர் மருத்துவமனை காலணியை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் நவீன் குமார் (28) என்பவர் தங்களுக்கு அறிமுகமானதாகவும் கடந்த (07/06 2020),ஆம் தேதி மாலை லோகநாயகியின் செல் போன் சார்ஜ் இல்லாததால் குற்றவாளி நவீன் குமாரிடம் தன்னுடைய செல்போனுக்கு சார்ஜ் போட்டு கொடுக்கும்படி கேட்டபோது குற்றவாளி ஆனவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டு லோக நாயகியின் (12) வயது மகனிடம் கொடுத்து அனுப்புவதாகவும் அழைத்துக் கொண்டு குற்றவாளி ஆனவர் நகராட்சி குப்பை கொட்டும் குடோனுக்கு சிறுமி அழைத்துச் சென்று பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கார்த்திகேயனி அவர்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளி (20/6/2020),ஆம் தேதி அன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் விரைவாக குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்து இவ்வலகு விசாரணை முடிவில் (29/03/2023), -ம் தேதி மேற்கண்ட குற்றவாளி பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றத்திற்காக போக சொன்ன நீதிபதி திருமதி. ஜெயந்தி அவர்களால் ஆயுள் சிறை தண்டனையும் ரூபாய். 10,000 அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திருமதி.சுதா அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான உமா பிரியதர்ஷினி, ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவகுமார் அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்