சேலம் : சேலம் ஈரோடு மாவட்ட சித்தோடு காவல் நிலைய எலவ மலை கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் சித்தோடு காவல் நிலைய குற்ற எண் 177 /97 174 crpc ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் சம்பவ இடமானது ஓமலூர் காவல் நிலைய எல்லைக்குள் பட்டதாக தெரியவந்ததால் வழக்கு கோப்பை ஓமலூர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு ஓமலூர் காவல் நிலைய குற்ற எண் 856 /97 32 மற்றும் 21, 109 r/w 34 ipc ஆக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணையில் ஓமலூர் காவல் நிலைய சரகம் கோபிநாதபுரத்தை சேர்ந்த சங்கர் என்கின்ற முருகன் என்பவரின் உறவினரை அதே பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்பவர் திருமணம் செய்ததாகவும் அதற்கு உதவியாக பெரியண்ணன் (25), வடக்காடு மற்றும் சசிகுமார் (25), வடக்காடு ஆகியோரை குற்றவாளிகள் கந்தசாமி (55), சக்கரை செட்டிப்பட்டி ஓமலூர் சங்கர் என்ற முருகேசன் (45), லேட் கோபிநாதபுரம் ஓமலூர் முருகேசன் (57) கோபிநாதபுரம் ஓமலூர் ஆகியோர்கள் சேர்ந்து சம்பத்குமாரின் நண்பரான பெரிய அண்ணன் மற்றும் சசிகுமார், ஆகியோரை கொலை செய்தனர். இவ்வழகு விசாரணை முடிவில் (23/03/2023),-ம் தேதி மேற்கண்ட கூட்ட குற்றவாளிகள் இருவருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக நீதிபதி திரு.ஜெகநாதன் அவர்களால் ஆயுள் சிறை தண்டனையும் தலா 41,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கி குற்றவாளிகளை மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார். மேலும் இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் திரு.துரைராஜ் அவர்கள் சிறப்பாக வாதாடி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர உதவியாக இருந்தார். தற்போதைய விசாரணை அதிகாரியான திரு.செல்வராஜன், ஓமலூர் காவல் நிலையம் அவர்களை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவக்குமார், அவர்கள் பாராட்டினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜாபர்