கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய பகுதியில் திருப்பதி என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஊத்தங்கரை MSM தோட்டத்தில் உள்ள தனது நண்பர் பத்மநாபன் என்பவரது வீட்டின் முன்பு (25.03.2023), ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு நிறுத்திவிட்டு பணி நிமித்தமாக சென்று மறுநாள் (26.03.2023) ஆம் தேதி காலை 8.00 மணிக்கு வந்து பார்த்தபோது நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் காணவில்லை எனவும் அக்கம் பக்கம் தேடியும் விசாரித்து கிடைக்கவில்லை என திருப்பதி (28.03.2023) ஆம் தேதி காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை செய்து இருசக்கர வாகனம் திருடிய நபரை கைது செய்து அவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.S.அஸ்வின்